வெறும் 7 ரூபாய் இருந்தால் போதும்..பென்சன் பணம் தேடி வரும்

ஒவ்வொரு நாளும் நீங்கள் வெறும் 7 ரூபாய் எடுத்து வைத்தாலே உங்களுடைய 60 வயதில் கோடீஸ்வரராக மாறிவிடலாம். இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். அது உண்மைதான். அப்படிப்பட்ட ஒரு திட்டம் உள்ளது.

அதற்கு நீங்கள் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இணைந்து முதலீடு செய்யவேண்டும். இதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நிதி ரீதியாக வலுவாகலாம். அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். 18 வயதில் முதலீடு செய்தால் அதிக பலன்களைப் பெறமுடியும்.

அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் நீங்கள் 18 வயதாகும்போது குறைந்தபட்சம் மாதம் ரூ.210 முதலீடு செய்யலாம். இது 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.7 ஆக இருக்கும். அதாவது, ஒரு நாளைக்கு வெறும் 7 ரூபாய் சேமித்தாலே போதும். உங்களுக்கு 60 வயதாகும்போது ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் வரை ஓய்வூதியமாகப் பெறுவீர்கள்.

வரி செலுத்தாதவர்கள் மட்டுமே அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்திருந்தால், வங்கியில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று நிரப்ப வேண்டும்.

படிவத்தை பூர்த்தி செய்த பிறகு அதை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும் உங்களுடைய அடல் பென்சன் யோஜனா கணக்கு திறக்கப்படும்.

Recent Post

RELATED POST