ஆண்களின் விந்தணு பிரச்சனையை சரிசெய்யும் ஜாதிக்காய்

ஜாதிக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பயாடிக் பண்புகள் நிறைந்துள்ளன. மருத்துவ குணங்கள் கொண்ட இந்த ஜாதிக்காயை எவ்வாறு பயன்படுத்துவது அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

ஜாதிக்காயை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால், முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகள் மறைந்து விடும். இதனால் முகம் மேலும் பொலிவாக காணப்படும். தேமல், படை போன்ற தோல் வியாதிகளுக்கு ஜாதிக்காய் பயன்படுகிறது.

Also Read : பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்ட திப்பிலி

அம்மை நோயின் போது, ஜாதிக்காயுடன் சீரகம் மற்றும் சுக்கு பொடி சேர்த்து, உணவிற்கு முன் சிறிது அளவு எடுத்துக் கொண்டால், அம்மை நோயால் ஏற்பட்ட கொப்புளங்கள் மறையும்.

ரத்தத்தில் கொழுப்பை குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும் ஜாதிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு சிட்டிகை ஜாதிக்காயை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது, அது சீரான தூக்கத்தை வழங்கும்.

ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைவுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் சிறந்த மருந்துகள் ஆகும்.

Also Read : ஆண்கள் நீண்ட நாட்களுக்கு விந்தணுக்களை வெளியேற்றாமல் இருந்தால் என்ன ஆகும்..?

வாய் அல்லது பற்களில் ஏற்படும் பிரச்சினைகளை விரைவில் குணப்படுத்த ஜாதிக்காய் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள், ஜாதிக்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியவற்றை சம அளவில் எடுத்து, அதில் வால்மிளகு இரண்டு பங்கு சேர்த்து நன்கு பொடியாக்க வேண்டும். பின்னர், 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொள்வது நல்லது.

இவ்வாறு 2 அல்லது 3 மாதங்கள் தொடர்ந்து செய்தால், தொண்டையில் உள்ள சதை வளர்ச்சி குணமாகும். தற்போது இதற்காக அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியை குணப்படுத்தலாம்.

Recent Post