கூகுள் மேப்பை பார்த்து சென்ற நபர் சேற்றில் சிக்கிய பரிதாபம்

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ்(25). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 11.20 மணியளவில், துரைப்பாக்கம் வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள ஒரு வீட்டுக்கு உணவு டெலிவரி செய்ய பைக்கில் சென்றுள்ளார்.

உணவு டெலிவரி செய்யும் இடத்திற்கு செல்லும் போது, செல்போனில் “கூகுள் மேப்” பார்த்து சென்றார். இருள் சூழ்ந்த அந்த பகுதியில் மேப் வழிகாட்டியதால், அவசரமாக சென்ற பவுன்ராஜ் அங்கு உள்ள சதுப்பு நில சேற்றில் சிக்கியுள்ளார்.

சேற்றில் சிக்கிய பவுன்ராஜ், அதிலிருந்து வெளியே வர முடியாததால் கூச்சலிட்டார், ஆனால் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் உதவி கிடைக்கவில்லை. இதையடுத்து துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த வாலிபரையும் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

Recent Post

RELATED POST