யோகாசனம்
அனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்
படத்தில் உள்ளது போல் ஆட்காட்டி விரலை நேராக வைத்துக் கொள்ளவும். நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் உள்ளங்கை தொடுமாறு இருக்கவேண்டும். கட்டை விரலை நடுவிரல் மீது வைத்து லேசாக அழுத்தவும். இதனை இரண்டு கைகளிலும் மாற்றி செய்யலாம்.
கழுத்து வலி உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யலாம். இதனை நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் செய்யலாம். தினமும் காலையிலும் மாலையிலும் 15 அல்லது 20 நிமிடம் செய்ய வேண்டும்.
இந்த முத்திரையை செய்வதால் தண்டுவடம் வலுவடையும். தோல்பட்டை தசைகளை வலுவாக்கும்.
You must be logged in to post a comment Login