ஆபத்தான நோய்களை குணமாக்கும் வாழைத்தண்டு

வாழைத்தண்டு விலை மலிவான ஒரு பொருள். சிறுநீரக கற்களை நீக்கி உடல் உபாதையை சரி செய்கிறது. வாழைதண்டில் நார்சத்து உள்ளதால் அதை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன.

கோடை காலத்தில் வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும். மேலும் கல்லீரல் வலுவடையும். சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கு வாழைத்தண்டு சிறந்த மருந்து.வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரக கற்கள் விரைவில் கரையும்.

ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து உடல் பருமனால் அவதிப்படுவோர் வாழைத்தண்டு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும். காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடித்து வந்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.

Recent Post

RELATED POST