பல நோய்களை குணப்படுத்தும் முருங்கையின் மருத்துவ பயன்கள்

நம் சாப்பிடும் உணவில் அதிகம் இடம்பெறுவது முருங்கை காய்தான். இதில் அதிக ஊட்டச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கிறது. பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இதில் உள்ளது.

முருங்கைக்காயில் கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்றவை போதிய அளவில் உள்ளன. 100 கிராம் முருங்கையில் 26 கலோரி இருக்கிறது.

முருங்கைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நோய்கிருமிகள் நெருங்காது. உடல் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இதயம், ரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலத்தை சிறப்பாக இயங்கவைக்கும், குறிப்பாக பிஞ்சு முருங்கைக்காயில் அதிக அளவில் சத்துக்களும் நன்மைகளும் உள்ளது.

வாயுக்கோளறு

வாயு கோளாறால் மிகவும் சிரமப்படுபவர்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 முறை உணவில் முருங்கைக்காயை சேர்த்துக்கொண்டால் வாயுக்கோளறு நீங்கும்.

பசியின்மை

நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிக்காமல் இருந்தால் முருங்கைக்காயையும் முருங்கைகீரையும் உணவில் சேர்த்துக்கொண்டால் அந்த கோளறு நீங்கும். பசியே எடுக்காமல் அவதியடைந்து வருபவர்கள், முருங்கைக்காயை சாப்பிட்டு, நன்றாக பசி எடுக்கும்.

ஆஸ்துமா பிரச்சனைகள்

அசைவ உணவுகளிலும் முருங்கைக்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமாவால் சிரமப்படுபவர்கள் வாரத்திற்கு 3 முறை சேர்த்துக்கொண்டால் நோயின் கடுமை குறையும். முருங்கைக்காயை சுடு தண்ணீரில் போட்டு வேக வைத்து, அதில் இருந்து வரும் ஆவியை சுவாசித்தால், ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் வராது.

இதய நோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டுவந்தால் நோய் விரைவில் குணமாகும்.

முருங்கையின் மருத்துவ குறிப்புகள்

பித்தக்கோளறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் முருங்கைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.

முருங்கைப் பூவை சுத்தம் செய்து, அதே அளவு பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்கு பலம் ஏற்படும்.

முருங்கைக்காயின் சாற்றை எடுத்து, அதனை பாலில் கலந்து குடித்து வந்தால், குழந்தைகளுக்கு எலும்புகள் வலிமை பெறும்.

உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்திகரிப்பதற்காக, முருங்கைக்காயை நாம் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

இருமல், தொண்டை வலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு அடிக்கடி ஆளாகுபவர்கள், முருங்கைக்காயை சூப் செய்து பருகலாம். இவ்வாறு செய்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

ஆண்களை விட கர்ப்பிணிப் பெண்கள் தான் அதிக அளவில் முருங்கைக்காயை சாப்பிட வேண்டும். பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் சில பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, முருங்கைக்காய் நல்ல தீர்வை தரும்.

முருங்கைக்காய்க்கு பல நோய்களை எளிதாக குணபடுத்தும் ஆற்றல் இருக்கிறது. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு ஆரோக்கியமும் உற்சாகம் கிடைக்கும்.

Recent Post

RELATED POST