பிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்கள்

அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படும் பிரியாணி இலைகள் உணவின் சுவைக்காக சேர்க்கப்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பிரியாணி இலைகள் சுவைக்காக மட்டுமல்ல. அதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் அதனை உணவில் சேர்க்கப்படுகிறது.

பிரிஞ்சி இலையை பிரியாணி இலை, லவங்கபத்திரி, பட்டை இலை என வேறு பெயர்களும் உள்ளது.

பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளது.

பிரிஞ்சி இலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கை, கால், மூட்டு வலிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தலைவலியின் போது இந்த எண்ணையை தேய்த்து மசாஜ் செய்தால் தலைவலி உடனே சரியாகிவிடும்.

பிரியாணி இலையில் உள்ள “என்சைம்ஸ்” என்ற புரதப் பொருள் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகிறது. பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களை சரி செய்யும்.

இந்த நீரை குடிப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் நல்ல அமைதியான தூக்கம் கிடைக்கும்.

பிரியாணி இலையை டீயில் சேர்த்து குடித்து வந்தால், மலச்சிக்கல், குடலியக்க பிரச்சனைகள் குணமாகும்.

டைப்-2 நீரிழிவு நோயாளிகள் பிரியாணி இலையை சேர்த்துக்கொள்வது நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

விசத்தை முறிக்கும் தன்மை பிரியாணி இலையில் இருப்பதால் இது பாம்புகடிக்கும் மருந்தாகும்.

தலையில் பொடுகு, அரிப்பு தொல்லை உள்ளவர்கள் பிரியாணி இலையை கொதிக்கவைத்து அதனுடன் எலுமிச்சை சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் இந்த பிரச்சனைகள் சரியாகும்.

Recent Post

RELATED POST