மழைக்காலத்தில் தக்காளியை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

நமது அன்றாட சமையலில் சில முக்கியமான காய்கறிகள் இருக்கும். அவை இல்லாமல் நமது சமையலானது முழுமை பெறாது. அப்படியான காய்கறிகளில் தக்காளியும் ஒன்றாகும். தக்காளியை தினமும் சாப்பிடுவதால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

தக்காளியில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தக்காளி சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சரி செய்கிறது. மழைக்காலத்தில் தக்காளி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. இந்த லைகோபீன் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு தக்காளி சிறந்த மருந்தாக உள்ளது. எனவே தக்காளி சாற்றை தினமும் குடிப்பது கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் தக்காளியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தக்காளி விதைகளில் ஆக்சலேட்டுகள் இருப்பதால் சிறுநீரக கல் நோயாளிகளை இன்னும் மோசமாக்கும்.

தக்காளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், மழைக்காலத்தில் தக்காளியை சாப்பிடுவதால் நோய்த்தொற்றுகள் குறையும்.

Recent Post