இடைக்காடர் சித்தர் கோவில் வரலாறு

சிவகங்கை மாவட்டத்தில் ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இடைக்காட்டூர்.

இரண்டாம் நூற்றாண்டில் 18 சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் இங்கு தங்கி வாழ்ந்துள்ளார். பூலோகம் கடுமையான பஞ்சத்தில் இருந்த போது, நவ கிரகங்களான சூரியன், ராகு, கேது, சனி ஆகியவை இடைக்காடர் சித்தரின் தங்குமிடத்திற்கு வந்தன.

இங்கு வந்த நவக்கிரகங்களை இடைக்காடர் உபசரித்து தினைமாவு உணவு வழங்கினார். பின்னர், ஓய்வு எடுத்த நவக்கிரகங்கள் ஒரே திசையில் இருந்தால் எப்போதும் பஞ்சம் நிலவும் என்பதைக் கூறி, இடைக்காடர் சித்தர் அவர்களை திசை திருப்பி வைத்தார்.

பூலோகத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சம் மற்றும் வளம் மாறி வருவதாக கூறப்படுகிறது. இன்றும் இடைக்காடர் சித்தர் எழுதிய பஞ்சாங்கம் நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இடைக்காடர் சித்தர் கோவில் பல்வேறு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. இங்கு ஐம்பொன் சிலை மற்றும் விநாயகர், முருகன், நவக்கிரகங்கள் ஆகியவற்றின் சன்னதிகள் உள்ளன. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இடைக்காடர் ஜெயந்தி விழா, குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

பௌர்ணமி நாளில் விசேஷ பூஜை மற்றும் வழிபாடு நடைபெறுகிறது. அனைத்து தோஷங்களும் நீங்க இடைக்காடர் சித்தர் நவகிரக கோவில் உள்ளது.

இருப்பிடம்: மதுரை ராமேஸ்வரம் சாலையில் 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

Recent Post