அடேங்கப்பா…. நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நித்யானந்தாவின் உண்மையான பெயர் ராஜசேகர்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணாச்சலம் மற்றும் லோகநாயகி தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாவார். இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவசாய குடும்பம்.இவரின் அப்பா ஒரு கூலி தொழிலாளி.
 
இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களின் பட்டியலில் இவரும் ஒருவர். தனது ஆன்மீக சொற்பொழிவால் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.
 
பெண்களுடன் உல்லாசமாக உள்ளதாக இவர் மீது  பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவரை தேடி அவரது பீடத்திற்கு பக்தர்கள் ஏராளக்கணக்கில் சென்று வருகின்றனர்.
 
இவரது தியான பீடத்தில் சேர விரும்புபவர்களுக்கு 2,000 முதல் 25,000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.தற்போது இவருடைய சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? 1.5 பில்லியன் டாலர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நித்தியானந்தா இதுவரை 27 மொழிகளில் 300 புத்தகங்கள் எழுதியுள்ளாராம்.