பங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்

படத்தில் உள்ளபடி இரண்டு கைகளையும் கும்பிடுவது போல் இணைத்து விரல்களை விரித்து கொள்ள வேண்டும். இரண்டு கட்டை விரல்களும் இரண்டு கை விரல்களும் ஒன்றோடொன்று இணைந்து இருக்க வேண்டும்.

பத்மாசனம் முறையில் அமர்ந்து இந்த பங்கஜ முத்திரை செய்யும் போது உடனடி பலன் கொடுக்கும். இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும்.

ஆரம்பத்தில் இதனை 16 நிமிடங்கள் செய்ய வேண்டும். நன்கு பழகிய பிறகு 48 நிமிடங்கள் வரை செய்யலாம். பங்கஜ முத்திரை நீண்ட நேரம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் உடலில் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

பங்கஜ முத்திரை பலன்கள்

  • உடல் அழகை அதிகரிக்கும்
  • நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி ரத்தம் தொடர்பான கோளாறுகளை சரிசெய்யும்.
  • முதுகெலும்பு ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  • வயிற்றில் உள்ள கட்டிகளை கரைக்கும்.
  • மன அமைதி தரும்.
  • நரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும்.

Recent Post

RELATED POST