சிறுநீரகத்தை பாதுகாக்கும் அன்னாசிப் பழத்தின் நன்மைகள்

உலக அளவில் அமெரிக்கர்கள்தான் அன்னாசிப் பழங்களை அதிகம் சாப்பிடுகின்றனர். அதனாலேயே அந்த நாட்டில் சிறுநீரக கோளாறு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

அன்னாசியில் உள்ள குளோரின் என்ற உப்பு சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க தூண்டிக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலிலுள்ள விஷப் பொருட்களும், கழிவுப் பொருட்களும், உடனுக்குடன் சிறுநீர் மூலம் வெளியேறி உடல் ஆரோக்கியமாக புதுப்பிக்கப்படுகிறது.

அன்னாசி அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த பழம் என்பதால், இதனுடைய பழச்சாற்றை ஜூஸ், கேக்குகள், ஐஸ்கிரீம் முதலியவற்றில் சேர்க்கின்றனர். அன்னாசி பழத்தில் புரொமெலின் என்ற செரிமானப் பொருள் இருக்கிறது.

அசைவ உணவு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் அன்னாசி பழச்சாறு அருந்தினால் போதும். மிக எளிதாக ஜீரணம் ஆகிவிடும். மலச்சிக்கலால் நீண்ட நாள் அவதிப்படுபவர்கள் அன்னாசிப்பழ சாறு அருந்திவந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

உடல் பலவீனமாக உள்ளவர்கள், நோயாளிகள் உடல் நன்கு பலத்துடன் விளங்க அன்னாசிப் பழச்சாற்றுடன் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தி வர வேண்டும். இதனால் உடல் சோர்வு நீங்கும். இதில் உள்ள சர்க்கரை, சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது.

பெண்கள் அன்னாசி பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மாதவிலக்கு அதிகம் வெளிப்படுவது கட்டுப்படும். கை, கால் வீக்கம் உள்ளவர்களும் தினமும் அன்னாசி பழம் சாப்பிட்டு வரலாம்.

அன்னாசிப்பழம் குடலையும், இரத்தத்தையும் சுத்தப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இந்த பழத்தில் துத்தநாக உப்பு இருப்பதால் ஆண், பெண் மலட்டுத்தன்மை விரைவில் குணமாகும். அன்னாச்சிப் பழத்தில் விட்டமின் A,B,C சத்துகள் நிறைந்துள்ளன.

அன்னாச்சிப்பழச் சாறுடன், தேன் கலந்து 40 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரு பக்கத் தலைவலி, வாய் புண், மூளைக்கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாச்சிப் பழச்சாற்றை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Recent Post

RELATED POST