Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

மாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்

மருத்துவ குறிப்புகள்

மாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்

மாதுளையில் பலவகை உண்டு. அவற்றில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை என்ற இருவகையே முக்கியமானவை. இவற்றில் வெள்ளை ராசி, சிவப்பு ராசி என்ற இருவகை உண்டு.

பொதுவாக மாதுளாம் பழத்தை உடல் நலத்திற்காக சாப்பிடுகிறோம். ஆனால் மாதுளைச் செடியின் இலை கொழுந்து, பூ பிஞ்சு, பழம், விதை, பட்டை வேர் அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது. இங்கு பூவைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

மூலக்கடுப்பு குணமாக

அதிமதுரம் 20 கிராம் எடுத்து, அதனுடன் மாதுளம் பூ சாற்றை விட்டு மை போல அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை மற்றும் மாலையில் ஒரு உருண்டையுடன் பசும்பால் சாப்பிட்டு வந்தால் மூலக்கடுப்பு குணமாகும். இவ்வேளையில் அதிக காரம் சேர்க்கக் கூடாது.

சீதபேதி குணமாக

ஏதேனும் ஒரு வகை மாதுளம் பூவை சுத்தம் செய்து அவற்றை உரலில் போட்டு இடித்துப் பிழிந்து, ஒரு அவுன்ஸ் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை அவுன்ஸ் சுத்தமான தேனையும் சேர்த்து கலக்கி காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.

அடிக்கடி ஏற்படும் வாந்தி, பித்த வாந்தி, ஆசனக் கடுப்பு, மயக்கம். அடிக்கடி மலம் கழித்தல், மலத்துடன் ரத்தம் சேர்த்து கழித்தல், மலம் கழித்தவுடன் ஆசனக்கடுப்பு போன்றவற்றிற்கும் மேற்கண்டவாறு சாப்பிட்டால் பூரண குணம் கிட்டும்.

10 மாதுளம் பூவை எடுத்து சுத்தம் செய்து, அதை நசுக்கி ஒரு ச ட்டியில் போட்டு, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு தம்ளராக வற்றும் வரைக் காய்ச்சி அக்கஷாயத்தில் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு 20 நாட்கள் காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால், பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

அதிக உஷ்ணம்

அதிக உஷ்ணம் காரணமாக மூக்கில் ரத்தம் வந்தாலும், பீனிச நோய் காரணமாக மூக்கில் அடிக்கடி ரத்தம் வந்தாலும் கீழ்க்கண்ட மருந்து விரைவில் குணமாக்கும்.

மாதுளம் பூவை சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்துப் பிழிந்து 2 அவுன்ஸ் சாறு எடுக்க வேண்டும். அதனுடன் அதே அளவு அருகம்புல் சாற்றையும் சேர்த்து அத்துடன் ஒரு அவுன்ஸ் சுத்தமான தேனையும் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

இதை காலையில் மட்டும் இரண்டரை அவுன்ஸ் வீதம் ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் பீனிசம் குணமாகும்.

வயிற்றுப்போக்கு

அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதை நிறுத்த, கீழ்க்கண்ட மருந்து பயன்படும்.

சுத்தம் செய்த மாதுளம் பூ 20 கிராம், மாதுளம் பழத்தின் கெட்டியான தோல் 20 கிராம் ஆகியவற்றை அம்மியில் வைத்து தட்டி ஒரு சட்டியில் போட வேண்டும். அதனுடன் இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு தம்ளராக மாறும்வரை சுண்டக் காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சி வைத்துள்ள கஷாயத்தில் ஒன்றரை அவுன்ஸ் அளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, தினமும் காலை, பகல், மாலை மூன்று வேளையாக மூன்று நாட்கள் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top