Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

சிறுகண் பீளை மருத்துவ பயன்கள்

sirukan peelai benefits in tamil

மருத்துவ குறிப்புகள்

சிறுகண் பீளை மருத்துவ பயன்கள்

சிறுகண்பீளை இலையை இடித்து சாறுபிழிந்து 30 மில்லி அளவு குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு கல்லடைப்பு, பெரும்பாடு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

சிறுகண்பீளை வேர் பட்டையில் பனை வெல்லம் சேர்த்து விழுது போல் அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தாலும் மேற்கண்ட நோய் குணமாகும்.

சிறுகண்பீளையுடன் சிறு நெருஞ்சில், மாவிலங்கை வேர், பேராமுட்டிவேர் இவற்றை சம அளவு சேர்த்து குடிநீர் செய்து குடித்து வர சிறுநீரகத்தில் உள்ள கல்லைக் கரைத்து வெளியேற்றும்.

சிறுகண்பீளை வேரை கஞ்சியில் சேர்த்துக் காய்ச்சி குடித்து வர கர்ப்பிணிப் பெண்களுக்கு வலுவைத் தரும்.

சிறுகண்பீளை பொடி செய்து 1/2 முதல் ஒரு கிராம் அளவு பாலில் கலந்து குடித்து வர ரத்தத்தைப் பெருக்கும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.

சிறுகண்பீளை வேர், சங்குப்பூ வேர், மூக்கிரட்டை வேர், வெட்டி வேர், விலாமிச்சை வேர், வில்வ வேர், முட்கா வேளை வேர் – இவற்றை சம அளவு எடுத்து கஷாயமாக்கிக் கொள்ளவும். அதில், ஒரு சிட்டிகை அளவு குங்கிலிய பொடி தூவி உட்கொள்ளக் கொடுக்க நீரடைப்பு, நீர்க்கட்டி பிரச்சினைகள் தீரும்.

சிறுகண்பீளை செடியை சமூலமாக (செடியின் அனைத்து பாகமும்) எடுத்து நீர் விட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து வடிகட்டி குடித்துவர சிறுநீரகம் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

சிறுகண்பீளை இலை 44 கிராம் எடுத்து வெண்ணெய் போல நன்கு அரைத்து நீர் கலக்காத எருமை: மோரில் கலந்து குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும்.

சிறுகண்பீளை, நெருஞ்சில் வேர், சீதேவி செங்கழுநீர்,மாவிலங்கப்பட்டை – இவற்றை சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீர்விட்டு நன்கு காய்ச்சி எட்டில் ஒரு பங்காய் வற்றியதும் வடிகட்டிக் கொள்ளவும். இதை காலை, மாலை இருவேளை குடித்து வர கல்லடைப்பு குணமாகும்.

சிறுகண்பீளை, சிறுகீரை வேர், நெருஞ்சில் இவற்றை சம அளவு எடுத்து இடித்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி உட்கொண்டு வந்தால் கல்லடைப்பு பிரச்சினை தீரும்.

சிறுகண்பீளை வேர் 17.5 கிராம் எடுத்து நன்கு பஞ்சுபோல இடித்துக் கொள்ளவும். அதை 650 மேல் நீரில் இட்டு நன்கு காய்ச்சி 100 மில்லியாக வற்ற வைத்து சிறுகண்பீளை நாயுருவி, சிறு நெருஞ்சில், வாழைச்சருகு. ஈருள்ளி – இவற்றின் சாறு சம அளவு சேகரித்து கலந்து தெளிய வைக்கவும். தெளிந்த பிறகு அதில் மேலோட்டமாக 325 மில்லி எடுத்து சேர்த்து அதில் 2 கிராம் அளவு அதிமதுரம், வெங்காரம் பொடித்துப் போட்டு ஒரு நாளைக்கு 3 வேளை குடித்து வர நீரடைப்பு சதையடைப்பு பிரச்சினைகள் குணமாகும்.

சிறுகண்பீளை வேர், நெருஞ்சி வேர், கடுக்காய் தோல், சிறுகாஞ்சொறி வேர், கொன்றை இலை கொழுந்து – இவற்றை வகைக்கு 17 கிராம் எடுத்து நீர் விட்டு நன்கு காய்ச்சி எட்டில் ஒரு பங்காக வற்ற வைக்கவும். வற்றியதும் அதில் 2 கிராம் வெங்காரம், சிறிது சர்க்கரை கூட்டி குடித்து வர நீர்ச்சுருக்கு குணமாகும்.

மேலும் அனைத்து விதமான மூலிகைகள் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top