நோய் வராத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் துளசி

மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை நோயே தாக்காத அளவுக்கு வலிமை தரும் ஒரு மூலிகை இது ஒன்றுதான். நோய் வருமுன் நம்மைக் காக்கும். நோய் வந்து இருந்தாலும் அதை குணப்படுத்தி, இனிவரும் காலத்தில் நோய் வராத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் துளசிக்கு உள்ளது.

மனிதனின் வாழ்க்கை சூழல், சுற்றுப்புறச் சூழல் மாற்றம் காரணமாக, தினம் தோறும் புதுப்புது காய்ச்சல் தோன்றுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மலேரியா காய்ச்சல், மூளைக் காய்ச்சல் என்று எவ்விதமான காய்ச்சலையும் துளசி ஒன்றே குணப்படுத்திவிடும்.

ஜப்பான் நாட்டு மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சல், என்செபலிடிஸ் என்னும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு துளசியைப் பயன்படுத்தி குணப்படுத்தி இருக்கின்றனர்.

சித்த மருத்துவத்தில் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும் 10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 தண்ணீரை டம்ளர் விட்டு அதனை அரை டம்ளர் வரும் வரை கண்டக் காய்ச்சி அருந்த வேண்டும். அதன் பிறகு சிறிது எலுமிச்சை சாரை அருந்தி கம்பளி போர்வை கொண்டு உடல் முழுக்க மூடிக் கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இளமை வேண்டுமா? துளசி நீரை அருந்துங்கள்

இளமையுடன் திகழ துளசி நீர் பயன்படுகிறது. சுத்தமான செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி ஊற வைத்து பின்பு அந்த நீரை வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ச்சியாக அருந்தி வர வேண்டும். இதன் மூலம் நாம் தோல் சுருக்கம் நீங்கி, நரம்புகள் பல படுவதைக் காணலாம். மேலும் இந்த நோய் நம்மை தாக்காது. பார்வைக் குறைபாடு குணமாகும், துளசி உடலில் வெப்பத்தை உண்டாகி கோழை அகற்றி விடுவது உடலின் உள்வெப்பத்தையும் குணப்படுத்தும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குறைய துளசிச் சாறு டன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்து வர குணமாகும். முகப்பரு, சொறி, சிரங்கு மறைய எலுமிச்சைச் சாறு துளசி இலையை சேர்த்து மைபோல அரைத்து தோல் நோய்களுக்கு போடலாம்.

துளசி இலையுடன் அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வருவதால் முகப்பரு நீங்கும். உடல் எடையைக் குறைக்க துளசி உதவுகிறது

நம்மில் பெரும்பாலானவர்கள் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று கடுமையாக உடற்பயிற்சிகள், ஜாக்கிங், ஓட்டம் பயிற்சிகள், நடைப்பயிற்சி என்று உடலை வருத்திக் கொண்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்று வருந்துகிறார்கள். இன்னும் தொப்பை, இடுப்பு சதை குறையவே இல்லை என்று வருத்தப்படும் அவர்கள் துளசிச்சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து உணவுக்கு பின்பு அருந்தி வந்தால் உடல் குறையத் தொடங்கும்,

தினசரி சிறிதளவு துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதியும் குணப்படும். இரத்தச் சர்க்கரை அளவைக்குறைப்பதில் துளசி அரு மருந்தாக உள்ளது.

பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்ஸிஜன் வெளியேறுகிறது என்பதை நாம் படித்திருக்கிறோம். ஆனால், துளசியில் ஒரு வித்தியாசம் உள்ளது.

துளசியில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் காற்று மண்டலத்தில் உள்ள புகை, கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான காற்று நமக்கு கிடைக்கிறது. துளசி அதிகம் வளரும் இடங்களில் கொசுக்கள் வராது.

Recent Post

RELATED POST