பயனுள்ள வீட்டு மருத்துவ குறிப்புகள்

தக்காளி சாஸ் செய்யும் போது, அதில் ஐந்து பல் வெள்ளை பூண்டையும் மைபோல் அரைத்து சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும். அஜீரணம் வராமல் காக்கும்.

மாதுளம் பிஞ்சை தயிருடன் சேர்த்து மை போல் அரைத்து சாப்பிட்டால் ரத்த பேதி குணமாகும்.

கசகசாவுடன் சிறிது கருப்பட்டி நாலு கிராம்பு சேர்த்து பொடித்து 3 வேளை சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.

தேங்காய் வழுக்கையுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச் சூடு தணியும்.

வெந்தயத்துடன் நான்கு கிராம்புகளை வைத்து, சிறிது நீர் தெளித்து, மை போல அரைத்து, தலையில் பூசி அரைமணி நேரத்திற்கு பிறகு குளித்தால், பொடுகு தொல்லை ஈர்கள் அழியும்.

ஆரஞ்சு பழத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொண்டால் குடலில் தீமை செய்யும் பூச்சிகள் உண்டாகாது.

வெள்ளைப் பூண்டுடன் சிறிது துளசி சாறு சேர்த்து அரைத்து தேமல் மேல் பூசி வந்தால் தேமல் மறையும்.

வெங்காய ரசத்தையும் எலுமிச்ச பழ ரசத்தையும் சம அளவில் கலந்து காலரா நோயாளிகளுக்கு கொடுத்து வந்தால், வாந்தி பேதி நின்றுவிடும்.

கறிவேப்பிலை கரிசலாங்கண்ணி கீழாநெல்லி போன்றவைகளின் சாறு கலந்து காய்ச்சிய எண்ணெய் தடவி வர இளநரை மாறும்.

வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலி இருக்காது.

பச்சை வெங்காயத்துடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் விலகும்.

வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து தடவி வர மூட்டு வலி நீங்கும்.

கொத்தமல்லியின் இலைச் சாற்றை பற்றாக நெற்றியில் போட்டால் தலைவலி குறையும்.

அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழித்தால் ஆரைக்கீரை சாப்பிடலாம்.

தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும்.

கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும் பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.

பனங்கிழங்கு பித்தத்தை நீக்கி உடல் பலத்தை அதிகரிக்கும்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தத்தை உருவாக்கும்.

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

அகத்திக் கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும் வயிற்றுப்புழுக்கள் அழியும்.

நெல்லிக்காய் சாற்றில் கொஞ்சம் பசு நெய்யை கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வாருங்கள் இருதயம் பலப்படும் உடலும் பலப்படும்.

கொய்யாப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய்கள் நீரிழிவு நோய்கள் குணப்படுத்தும்.

வெந்நீரில் நிறைய உப்பு போட்டு தொண்டையில் படும்படி வைத்திருந்து கொப்பளிக்க தொண்டை வலி தொண்டை கமறல் குணமாகும்.

பசும்பாலில் மஞ்சள் பொடியையும் சிறிது மிளகுப் பொடியையும் போட்டு காய்ச்சி நன்றாக கொதி வந்ததும் இறக்கி பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேலை சாப்பிடுங்கள் இருமல் சரியாகிவிடும்.

கற்கண்டுடன் சீரகத்தை சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து வடிகட்டி அதில் சர்க்கரை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.மேலும் நல்ல செரிமானம் ஆகும்.

சாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த கொதி கஞ்சியில் பனங்கற்கண்டு, வெண்ணை அல்லது நெய் சேர்த்து சூடாக குடித்தால் தொண்டை வலி, தொண்டை புண் குணமாகும். அல்லது தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம்.

சுண்டைக்காயை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் இருமல் குணமாகும். அல்லது பாலில் 6 பேரிச்சம் பழத்தை வேக வைத்து சாப்பிடலாம்.

வாழைப் பழத்தோடு ஏலக்காய் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வர, அதிக உதிரப்போக்கு பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.

தூதுவளையை மைபோல அரைத்து, நெல்லி அளவு எடுத்து பசும் பாலில் கலந்து, காலை மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட, 15 நாட்களில் கை நடுக்கம் சரியாகும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.

பாசிப்பயறு, பூண்டு, வெந்தயம், அரிசி, சீரகம் போட்டு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகும்.

எலுமிச்சை சாறை முகத்தில், தடவி அரை மணி நேரம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் கழுவினால் முகப்பரு நீங்கும்.

வெறும் வயிற்றில் கொத்துமல்லி சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

குளிர்ந்த நீரில் எலுமிச்சை சாறு கலந்து மெதுவாக குடித்தால் செரிமானச் சிக்கல் தீரும். இதில் சர்க்கரை, உப்பு எதுவும் சேர்க்கக்கூடாது.

Recent Post

RELATED POST