வெந்தயக்கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வெந்தய கீரை உயிர்ச்சத்து கொண்டுள்ள உணவாக விளங்குகிறது. வெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஜீரண கோளாறுகளை சரி செய்யும். பசியைத் தூண்டும். இருமல் குணமாகும். நாவறட்சி நீங்கும்.கண்பார்வை தெளிவடைய செய்யும்.

வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.

வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும் குணமாகும்.

இக்கீரையில் தேங்காய் பால், முட்டை சேர்த்து குருமா தயாரித்து நெய்யில் தாளித்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும். வெந்தயக் கீரையை பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது சாம்பார் வைத்தும் சாப்பிடலாம். வெந்தயக் கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் வாய்ப்புண் குணமாகும்.

தொடர்ந்து இயக்கிக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் பலப்படும் தசை நார்களும் நரம்புகள் பலப்படும்.

Recent Post

RELATED POST