வேப்பம் பூவில் உள்ள மருத்துவ குணங்கள்

வேப்ப மரம் மிகப் பெரிய மருத்துவ குணங்களை கொண்டது, இது ஒரு கிருமிநாசினி இதனுடைய காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். இதனுடைய குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது.

வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் இந்தப் பூ சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. கிராமப்புறங்களில் அதிகம் கிடைக்கும். சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த பூ கிடைப்பது அரிதாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு இந்தப் பூவின் மருத்துவ குணங்கள் தெரிவதில்லை. இப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேப்பம்பூவை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம், பச்சையாகவோ அல்லது சர்பத் தயாரித்து சாப்பிடலாம். வேப்பம் பூவை துவையலாகவோ அல்லது பொடி செய்தோ பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் செய்து கொடுத்தால் வயிறு சுத்தமாகும்.

வேப்பம் பூவை காய வைத்து லேசாக வறுத்து பொடி செய்து, பருப்பு பொடியுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வேப்பம்பூவை சாதத்தில் போட்டு சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் போன்ற பிரச்சனைகளை நீக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றிலுள்ள கிருமிகள் அழியும்.

வேப்பம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வெயில் காலங்களில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

Recent Post

RELATED POST